16 Nov 2014

கடந்த யுத்த காலத்தில் 60000 சிங்கள மக்களும் 40000 தமிழ் மக்களும் இறந்துள்ளார்கள் - கிழக்கு கல்வி அமைச்சர்

SHARE
கடந்த காலங்களில் தமிழ் மக்களிடத்திலும், சிங்கள மக்களிடத்திலும், ஆயுதங்கள்தான் இருந்தன. இவ்வாறு கடந்த யுத்த காலத்தில் 60000 சிங்கள மக்கள் யுத்தினால் இறந்துள்ளார்கள் இதில் எந்த விதமான இயக்கங்களுடனும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள்தான் இறந்தார்கள்.


ஆனால் 40000 ஆயிரம் போர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து இறந்துள்ளார்கள். இதுதான் உண்மை இதனை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.  தற்போது வரைக்கும் யுத்தம் நடைபெற்றிருந்தால் லெட்சக்கணக்கான மக்கள் மேலும் அழிந்திருப்பார்கள். என கிழக்கு மாகாண கல்வி அமை;சர் விமல வீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட சாதனையாளர் பாராட்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை (16) மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்……


கடந்த 2008 ஆம் அண்டு காலப் பகுதியில் இலங்கையில் இருக்கின்ற 9 மகாணங்களிலும்  9 வது இடத்தில்தான் இருந்து வந்தது. ஆனால் தற்போது கிழக்கு மாகாணம் முன்னேறிக் கொண்டு வருகின்றது கடந்த 2013 ஆம் அண்டு உயர்தரப்ப் பரீட்சையில் கிழக்கு மாகாணம் 3 வது இடத்தைப் பெற்றுக்கொண்டது ஆனால் அதில் முதலிடத்தினை வடமாகாணம் பெற்றுக் கொண்டுள்ளது.

வட மாகாணத்தில் தொடர்து 26 வருடகாமாக யுத்தம் நிலவியிருந்தது, அங்கிருந்த மாணவர்களின் கையில் பென்னுக்குப் பதிலாக துவக்குத்தான் இருந்தது, கையிலே பந்துகளுக்குப் பதிலாக குண்ண்டுகள்தான் இருந்துள்ளன, கழுத்திலே மாலைக்குப் பதிலாக சைனைட்தான் இருந்துள்ளன. இவ்வாறு இருந்து வந்துள்ள நிலையிலும் கூட கடந்த 2013 ஆம் அண்டு  கல்வி பொது தர உயர்தரப் பரீட்சையில் வடமாகாணம்தான்  முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறு பார்தாலும் தமிழ் மாணவர்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றார்கள்.

இதுபோன்றுதான் கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மாணவர்கள்தான் அதிக பெறுபேற்றை எடுத்துள்ளானர்கள். சிங்கள மாணவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுக கூறக்கூடிய வகையில் முதலிடம் பெறவில்லை.

யாழ் மாவட்டத்தில் வீதி, வைத்தயிசாலை, பாடசாலைகள் அனைத:தும் மிகவும் நல்லமுறையில் இருக்கின்றன. இருந்தாலும் அங்குள்ள மக்களின் மன நிலையில் மாற்றம் உள்ளமத என்பது பற்றி எமக்குத் தெரியாது.


கடந்த காலங்களில் எமது கிரதேசத்தில் யாரும் கதைக்க முடியாத சூழல் காணப்பட்டது. மதத் தலைவர்களும் வாய் விட்டுக் கதைக்க முடியாமலிருந்தார்கள். ஆனால் மாறாக ஆயுங்கள்தான் கதைத்தன.


கடந்த காலங்களில் தமிழ் மக்களிடத்திலும், சிங்கள மக்களிடத்திலும், ஆயுதங்கள்தான் இருந்தன. இவ்வாறு கடந்த யுத்த காலத்தில் 60000 சிங்கள மக்கள் யுத்தினால் இறந்துள்ளார்கள் இதில் எந்த விதமான இயக்கங்களுடனும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள்தான் இறந்தார்கள்.


ஆனால் 40000 ஆயிரம் போர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து இறந்துள்ளார்கள். இதுதான் உண்மை இதனை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.  தற்போது வரைக்கும் யுத்தம் நடைபெற்றிருந்தால் லெட்சக்கணக்கான மக்கள் மேலும் அழிந்திருப்பார்கள்.


தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழல் காரணமாக பாரிய அபிவித்திகள் நடைபெற்று வருகின்றன.


என்னைப் பெறுத்த வரையில் நான் பௌத்த சமயத்தைச் சார்ந்தவன் ஆனாலும் எனக்கு தமிழ், முஸ்லிம், சிங்களம், என்ற பேதமின்றித்தான் செயற்பட்டு வருகின்றேன். நான் ஒரு பௌத்தனாக இருந்து கொண்டாலும் மாமிச உணவுகள் எதையும் உட்கொள்வதில்லை மரக்கறி வகையினைத்தான் உண்டு வருகின்றேன். அதற்காக நான் பொதுபலசேனா இல்லை.


தற்போது எமது மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக கல்வி, சீருடை, புத்தகம், உணவு, சப்பாத்து, அனைத்து வழங்கப் படுகின்றது. இருந்த போதிலும’ மாணவர்களிள் பெறுபேறுகள் இன்னும் போதாதுள்ளது. எனவே தமிழ் மாணவர்கள் அதிகம் கற்து இன்னும் மேன்மேலும் முன்நேற்றமடைய வேண்டும்.


ஆனால் நான் கல்வி கற்கும் காலத்தில் எமக்கு புத்தகம் இல்லை, பென் இல்லை, உதவுவதற்கு யாருமில்லை, எனது அப்பாவும் இறந்து விட்டார், அம்மாவால் எதுவும் செய்ய முடியாது. ஆதனால் நான் 6 ஆம் ஆண்டுவரைதான் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்று விட்டு பாடசாலைக் கல்வியை நிறுத்தி விட்டேன். ஆனால் தற்போது நான் ஒரு கல்வி அமைச்சராக இருக்கின்றேன்.


6 ஆம் அண்டு வரை பாடசாலைக்குச் சென்று படித்த கல்வி அமைச்சர் நான் மட்டும்மான் இந்த உலகிலே இருக்கின்றேன்.

பின்னர் நான் பாடசாலையிலிருந்து இடைவிலகிவிட்டு கூலி வேலை செய்து வீட்டிலிருந்து தனியாக இருந்து நன்றாகப் படித்தேன் கல்வி பொது தர சாதாரணதரம் சித்தி பெற்றேன், பின்னர் உயர்தரத்தையும் வீட்டில் தனியாக இருந்து படித்தேன் எனக்கு கொழும்பு பல்கலைக் கழகம் கிடைத்தது.


இதன் பின்னர் நான் பிரதேச சபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துவிட்டு தற்போது கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்து வருகின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: