1 Feb 2014

“எதிர் காலத் தெரிவு விவேக வழியா அல்லது கடும்போக்குத்தனமா”

SHARE
(சக்தி)
“எதிர் காலத் தெரிவு விவேக வழியா அல்லது
கடும்போக்குத்தனமா” எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகள் மற்றும் சர்வமதத் தலைவர்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று (01.02.2014) மடக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில நடைபெற்றது.

“முஸ்லிம் எயிட்” எனும் அரச சார்பற்ற அமைப்பின் எற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநித்தித்துவப் படுத்தும் இளைஞர்கள், யுவதிகள் மற்றும், சர்வமதத் தலைவவர்கள் பொது அமைப்புக்ளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கடந்த 10 ஆண்டுகாலமாக மனிதாபிமான மற்றும் வாழ்வாதாரப் பணிகளில் ஈடுபட்டுவரும் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு அதுதொடர்பாக காட்சிப் படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் “முஸ்லிம் எயிட்” நிறுவனத்தின் இலங்கை நாடுட்டுக்கான பணிப்பாளர் பைசர்.கான், மகாத்மா காந்தி சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் முஹமது சலீம், மற்றும், முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டு விளங்கமளித்தனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: