(சக்தி)
மட்.களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் 10 வருடங்களின் பின்னர் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 13 அன்று களுதாவனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மட்.களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் 10 வருடங்களின் பின்னர் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 13 அன்று களுதாவனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் ரி.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் டைபெற்ற இந்நிகழ்வில் மீழ் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன், மட்டக்களப்பு தேசியியற் கல்விக் கல்லுரி பீராடதிபதி எஸ்.இராஜேந்திரன், களுவாஞ்சிகுடி கோட்டக் கல்வி அதிகாரி பி.பாலச்சந்திரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சமூகம், பெற்றார்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாடசாலை மதணவர்கள் “நீலோற்பலம்” , “ரோஜா” , “சூரியகாந்தி” , என பெயர் வைக்கப்பட்டு இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு குழுநிலை மற்றும் தனிப்போட்டிகளும் இதன்போது நடைபெற்றன. இதில் இறுதியில் நீலோற்பலம், இல்லம் முதலாம் இடத்தினையும் , சூரியகாந்தி இல்லம் இரண்டாம் இடத்தினையும், ரோஜா இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்று வெற்றியீட்டியது.
வேற்றிபெற்ற இல்லங்களுக்கும் வீரர்களுக்கம் வெற்றிக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
0 Comments:
Post a Comment