19 Jan 2014

சமீபத்தில் மராத்தி நடிகை ஒருவர் காணாமல் போனார்

SHARE
சமீபத்தில் மராத்தி நடிகை ஒருவர் காணாமல் போனதும் அவர் சென்னையில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியும் நேற்றும் வெளியானது. தனது கார் டிரைவருடன் அவர் சென்னைக்கு வந்து தங்கியிருந்ததாகவும்இ கார் டிரைவரின் செல்போன் டவரை வைத்து மும்பை போலீஸார் சென்னைக்கு வந்து கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது நடிகை இருக்குமிடம் தெரிந்து அவரை கண்டுபிடித்ததாகவும் நேற்று செய்திகள் வெளியாகின.

இன்று இவர்களை பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 44வயது மராத்தி நடிகை யுடமய Pரநெறயசஇ சென்னையில் ரகசியமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வந்ததாக தெரிகிறது. தனது கணவரிடம் படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வந்த நடிகை யுடமய Pரநெறயசஇ தனது டிரைவரான காதலருடன் நேராக சென்னைக்கு வந்துவிட்டார். இங்கு ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரை அணுகி தன்னுடைய முகத்தை முழுவதும் மாற்றும்படியான பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும் என்று கூறி அதற்கு ஒரு பெரிய தொகை கொடுப்பதாகவும் ஆசைவார்த்தை காட்டியுள்ளார். அவருக்கு குறிப்பிட்ட ஒரு தேதியில் பிளாஸ்டிக் சர்ஜர் செய்து முகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்குள் செல்போன் டவர் காரணமாக அவர் மாட்டிக்கொண்டார்.

இந்த தகவலை நேற்று சென்னை போலீஸாரும்இ மும்பை போலீஸாரும் வெளியிடவில்லை. நடிகை கிடைத்துவிட்டார் என்று மட்டுமே அறிவித்தனர். ஆனால் புலனாய்வு பத்திரிகை ஒன்று இந்த மர்மத்தை கண்டுபிடித்து அதன் இணையதளத்தில் தற்போது இந்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: