20 Jan 2014

சட்டவிரோதமாக் கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

SHARE

(வரதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலைப் பொலிஸாரால்சட்ட விரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப் பட்டுள்ளன.
பிரதேசத்தின் மணற்பிட்டி மற்றும் அம்பிளாந்துறை ஆகிய இடங்களில் மேற் கொள்ளப்பட்ட வீதிச் சோதனையின் போது சனிக்கிழமை இரவு (18)  (200000.00) இரண்டு லெட்டம் ரூபா பெறுமதி மிக்க மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன. 

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இதன்பின்னர் குற்றவாளிகளுக்கெதிராக களுவாஞ்சிகுடி நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எ.தூசார தெரிவித்தார்.
சாஜன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் அதிகாரி குழுவினரால்  இவ் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: