(வரதன்)
கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி சாமித்தம்பி- செந்தில்நாதன், அந்தோனிப்பிள்ளை அன்ரன்-அருள்ராஜா , ஆகியோரின் இரண்டு நூல்களில் வெளியீடுட்டு விழா இன்று (19) காலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏடு அமைப்பின்; தலைவர் கே.அருளானந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பப் பிரிவுப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ல.கங்கேஸ்வரன் , மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், வவுனதீவுப் பிரதேச செயலாளர் வி.தவராஜா, மற்றும் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் இலக்கியவாதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நூலின் முதற்பிரதியினை மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பப் பிரிவுப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ல.கங்கேஸ்வரன் , அவர்கள் நூலாசிரியர்களான சாமித்தம்பி- செந்தில்நாதன், அந்தோனிப்பிள்ளை அன்ரன்-அருள்ராஜா , ஆகியோரிடமிருந்து முதற் பிரதியினைப் பெற்றுக்கொண்டார்.
வர்த்தக முகாமைத்துவ துறை சார்ந்தவர்களுக்குப் பயன்படும் வகையில் குறித்த இந்த இரண்டு நூல்களும் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment