(சக்தி)
மட்டக்களப்பு- களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினால் கடந்த 15 அன்று பரிசழிப்பு விழாவும்; கௌரவிப்பு நிகழ்வும் களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு- களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினால் கடந்த 15 அன்று பரிசழிப்பு விழாவும்; கௌரவிப்பு நிகழ்வும் களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.வேல்வேந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எம்.ஞானப்பிரகாசம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், பட்டிருப்பு கல்வி வலய பொறியியலாளர் ரி.இராசநாயகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, அவர்கள் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் பட்டிருப்பு கல்வி வலயத்தினுள் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கம் , களுதாவளை கிராமத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து இருந்து கடந்த வருடம் (2013) புலமைப் பரிசில் பரீட்சை, கல்வி பொதுத் தர சாதாரண பரீட்சையில் அதிகூடிய பெறுபெறு பெற்று , மற்றும் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 80 மாணவர்களுக்குhக பரிசில்கள் வழங்கப்பட்டதோடு.
களுதாவளை கிரமத்திற்காகச் சேவையாற்றிய நான்கு சேவையாளர்களுக்கும் பொன்னாடை போர்தி கௌரவிக்கப் பட்டனர்.
0 Comments:
Post a Comment