(வரதன்)
மட்டக்களப்புஇ காந்திசிலை முன்பாக திங்கட்கிழமை (20) மாலை இடம்பெற்ற விபத்தில் புன்னச்சோலையை சேர்ந்த3பிள்ளைகளின் தந்தையான நாகன் ரவீந்திரன் (வயது 46) உயிரிழந்துள்ளதாகவும் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த லொறியொன்றுடன்; மோதி சைக்கிளில் பயணித்தவர் விபத்தில்
சிக்கி படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் ஏறவுரை பிறப்பிடமாக கொண்டவார் வெளி நாடு செல்ல பாதணி வாங்க வந்த வேளை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment