29 Sept 2012

படுவான்கரையில் மினி சூறாவெளியின் கோரம்

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட  புதுமுன்மாரிச்சோலை, றாணமடு, சின்னவத்தை, பாலையடிவடடை, மாலையர்கட்டு, பலாச்சோலை, போன்ற பல பின்தங்கிய எல்லைக் கிராமங்களில் நேற்று (28.09.2012) மாலை தாக்கிய மினி சூறாவெளி காரணமாக பலத்தவீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பல பயன்தரும் மரங்களும் முறிந்துள்ளன.
அந்தவகையில் புதுமுன்மாரிசசோலை கிராமத்தில் 55 வீடுகளும், சின்னவத்தை கிராமத்தில் 30 வீடுகளும், பாலையடிவடை கிராமத்தில் 49 வீடுகளும், றாணமடு கிராமத்தில் 51 வீடுகளும், மாலையர்கட்டு கிராமத்தில் 55 வீடுகளுமாக மொத்தமாக 240 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாரமத்துவ பிரதிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், தெரிவித்துள்ளார்
இதனைவிட நூற்றுக்கு மேற்பட்ட பல பயன்தரும் மரங்களும் சேதமைந்தள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம சேவையளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலமையினை பார்வையிடுவதற்காக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தயோகஸ்தர் சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச்சங்க மட்டக்களப்பு கிளை அதிகாரிகள் போன்றோர் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்டுள்ளனர்.
மினி சூறாவெளியினால் தமது இருப்பிடங்களை இழந்த அப்பகுதி மக்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்து பாதிக்கப்படட தமது இருப்பிடங்களை துப்பரவு செய்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
சேத மதிப்பீடுகள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திநூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலகத்தின் சமூக சேவை உததயோகஸ்தர் சிவகுமார் தெரிவித்தார்
வீடுகளின் கூரைகள் மற்றும் வீட்டுச் சுவர்கள் இடிந்தும் வீடுகளின் மேல் மரங்கள் முறிந்தும் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

















SHARE

Author: verified_user

0 Comments: