28 Sept 2012

படுவான்கரைப் பகுதியின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் மினி சூறாவெளி

SHARE
 மட்டக்களப்பு படுவான்கரை பகுதியான போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நவகி நகர் -  புதுமுன்மாரிச்சோலை எனும் கிராமத்தில் இன்று மாலை வீசிய மனி சூறாவெளி காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் த.குழந்தைவடிவேல் தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்  சுமார் 102 நபர்கள் தங்களது உறவினர்களின் வீடுகளை நாடிச் செல்வதாகவும் அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மேலும் தெரிவித்தார்
குடந்த காலத்தல் இப்பகுதியில் ஏற்பட்ட யுத்தத்தினால் இடம் பெயர்ந்து கடைசியாக கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் மீளக்குடியமர்தப்பட்;ட இம்மக்கள் தற்போது வேளாண்மை மற்றும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையினையும் மேற்கொண்டு வரும் இவ்வேளையில்
மிக அண்மைக்காலமாக இப்பகுதியில் வரட்சி நிலவி வந்தபோதும் தற்போது திடீரென இப்பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் சுழல் காற்று காரணமாக இப்பகுதியல் உள்ள மரங்கள் முறிந்தும் வீடுகளின் கூரைகள் மற்றும் வீட்டுச் சுவர்கள் இடிந்தும் வீடுகளின் மேல் மரங்கள் முறிந்தம் உள்ளன என்பது குறப்பிடத் தக்கதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: