20 Sept 2012

வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

SHARE
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் இலண்டன் செல்வ விநாயகர் ஆலயத்தின் நிதி உதவி மூலம் வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை செயலாளர் சா.மதிசுதன் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இங்கு நூற்றுக்கு மேற்பட்ட வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக செயலாளர் சா.மதிசுதன் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: