18 Dec 2023

சோளன் பயிற் செய்கையில் படைப்புழு கட்டுப்பாடு தொடர்பிலான விழிப்புணர்வு.

SHARE

சோளன் பயிற் செய்கையில் படைப்புழு கட்டுப்பாடு தொடர்பிலான விழிப்புணர்வு.

சோளன் பயிர்ற் செய்கையில் படைப்புழு கட்டுப்பாடு தொடர்பிலான விழிப்புணர்வுச் செயலமர்வொன்று விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழுள்ள களுமுந்தன்வெளிக் கிராமத்தில் திங்கட்கிழமை(18.12.2023) நடைபெற்றது.

பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் பி.சகாப்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயத்திணைக்களத்தின் மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, உதவி விவசாயப் பணிப்பதளர் எஸ்.சித்திரவேல்பேராதனை விவசாயத் திணைக்களத்தின் தலைமைக்காரியாலய நோய் பீடை பராமரிப்பு ஆராய்ச்சி உத்தியோகஸ்த்தர் தம்மிக்கா சரச்சந்திர உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு விவசாயிகளுக்குரிய ஆலோசனைகளையும், படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய சேளன் பயிற்செய்கையில் தாக்கத்தைச் செலுத்தும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தாம் முயற்சிப்பதாக இதன்போது விவசாயிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய சேளன் பயிற்செய்கையில் தாக்கத்தைச் செலுத்தும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தாம் முயற்சிப்பதாக இதன்போது விவசாயிகள் கருத்துத் தெரிவித்தனர்.



























SHARE

Author: verified_user

0 Comments: