2 Jun 2023

முன்னால் உபவேந்தருக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இறுதி அஞ்சலி!!

SHARE

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி பேராசிரியர் பொன்கலன் இராஜேந்திரம் அடிகளார்  தனது 89 வது வயதில் 01.06.2023 நேற்று காலமாகியுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3வது உபவேந்தரான அன்னாரின் பூதவுடல் இன்று 2023.06.02  வெள்ளிக்கிழமை பி.ப.12 மணி தொடக்கம் 1.30 வரை கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

1995 தொடக்கம் 1997 ஆம் ஆண்டு கால பகுதியில் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாரறிய இவர் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினராகவும் மூன்றாண்டுகள் கடமையாற்றியுள்ளார்.

காலஞ்சென்ற அருட்தந்தையின்   இறுதி அஞ்சலித்  திருப்பலி  எதிர்வரும் மூன்றாம் திகதி  (03.06.2023) புளியந்தீவு, புனித மரியாள் பேராலயத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம் பெறவுள்ளதுடன், இறுதி அஞ்சலி திருப்பலி நிகழ்வினைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஆலையடிச்சோலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: