5 Mar 2023

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தங்க விருது.

SHARE

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தங்க விருது.

அண்மையில் நாடளாவிய ரீதியில் இலங்கை தரமுகாமைத்துவ நிறுவனத்தால் கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 69 நிறுவனங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் 400 இற்கும் மேற்பட்ட குழுக்களுக்கிடையே போட்டி நடாத்தப்பட்டு வழங்கப்பட்ட விருது வழங்கும் விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் மற்றும் தரமுகாமைத்துவ பிரிவு வைத்தியரும், களுதாவளை ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான குகதாசன் மயூரேஷன் தலைமையிலான குழுவில் தாதிய பரிபாலகி திருமதி சுகிர்தராணி ஜெயரட்ணம், தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பொறுப்பு தாதி உத்தியோகஸ்த்தர் திருமதி சுதர்ஜினி ஜீவன், மற்றும் தரமுகாமைத்துவ பரிவு பொறுப்பு தாதி உத்தியோகஸ்த்தர் திருமதி தனுஸ்சா பிரசாந், மற்றும் சிற்றூழியர் மேற்பார்வையாளர் ஜெயசீலன் கிரிதரன் ஆகியோர் மேற்படி வைத்தியசாலை சார்பாகக் கலந்து கொண்டு தங்க விருதைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி குணசிங்கம் சுகுணன் அவர்களின் ஆலோசனையும், வழிகாட்டுதலின் பெயரில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய அத்தியட்சகர் .புவனேந்திரநாதன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், திட்டமிடல் மற்றும் தரமுகாமைத்துவ பிரிவு வைத்திய அதிகாரி குகதாசன் மயூரேஷன் விளக்கக்காட்சிப்படுத்தினார். தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பொறுப்பு தாதி உத்தியோகஸ்த்தர் திருமதி சுதர்ஜினி ஜீவன் அவர்கள் அயராத முயன்று செய்த கழிவு முகாமைத்துவ ஆய்வினை கொண்டு இவ்விருதுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்விருதுக்காக அரச மற்றும் தனியார் அமைப்புக்களிலிருந்து விண்ணப்பித்த நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுள் சுகாதாரத் துறைசார்ந்து விண்ணப்பித்தவர்களுள் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தயிசாலைக்கு மாத்திரமே இந்த தங்க விருது கிடைக்கப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இவ்விருது கிடைக்கதற்கு சகல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி கு.சுகுணன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய அத்தியட்சகர் .புவனேந்திரநாதன், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாக தரமுகாமைத்துவ பிரிவு வைத்திய அதிகாரி கு.மயூரேஷன் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: