5 Sept 2022

சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

SHARE

சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் சபாரெத்தினம் சிவயோகநாதன் என்பவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு விசாரணை ஒன்றுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை(03.09.2022) பி. 5.15 மணியளவில் மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் அமைந்துள்ள எனது வீட்டிற்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த இரு பொலிசார் என் மீது விசாரணை செய்யவேண்டியுள்ளதால் எதிர்வரும் 09.09.2022 அன்று இலக்கம் 149 பூட்டாலி கட்டிட தொகுதி கிருளப்பனை கொழும்பு 05 என்ற முகவரியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு 01 இன் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதுடன் அதற்கான அழைப்புக்கடிதமும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனாலும் எனது தந்தை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் பிறிதொரு திகதியை தருமாறு கேட்டுக்கொண்டேன்.

என்னகாரணத்திற்காக விசாரணை என்ற விபரங்கள் எதுவும் எனக்கு கூறப்படவில்லை. இதேபோல் ஏற்கனவே இதே பிரிவினரால் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தேன். ஏன சபாரெத்தினம் சிவயோகநாதன் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: