15 Jun 2022

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 4 கைதிகள் விடுதலை.

SHARE

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 4 கைதிகள் விடுதலை.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் செவ்வாய்கிழமை  (14)  இலங்கையில் உள்ள சிறைகளில் இருந்து 173 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஏலவே தெரிவித்திருந்தார்.

இதன்படி தண்டனை இரத்து ஊடாக 141 கைதிகளையும் 14 நாட்கள் தண்டனை காலம் குறைப்பின் ஊடாக 32 கைதிகளையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் சிறைவாசம் அனுபவித்து வந்த 4 கைதிகள் செவ்வாய்கிழமை  (14)  காலை மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகரவின் வழிகாட்டலில் பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை   நால்வரும் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.



SHARE

Author: verified_user

0 Comments: