1 Apr 2022

சுரவணையடியூற்றில் புதிய பாடசாலை திறந்துவைப்பு.

SHARE

சுரவணையடியூற்றில் புதிய பாடசாலை திறந்துவைப்பு.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று  கிராமத்தில்  புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் செவ்வாய்கிழமை (29) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் பாடசாலையின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் பிரதான அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

அதிதிகள் உரை இடம்பெற்றதனைத்  தொடர்ந்து பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி.ந. புள்ளைநாயகம், வலயக்கல்வி பணிப்பாளர், முற்















போக்கு தமிழர் கழகத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கிராமம் ஆரம்பிக்கப்பட்ட காலமிருந்து அங்குள்ள மாணவர்கள் ஏனைய கிராமங்களில் அமைந்துள்ள பாடசாலைக்குச் சென்றே கல்வி கற்று வந்தனர். இது தொடர்பில் ஊடகங்களிலும் பலமுறை பேசப்பட்டு வந்த இந்நிலையில் அக்கிராமத்தவர்களின் அயராத முயற்சியினால் அக்கிராமத்தில் தற்போது ஆரம்ப பாடசாலை ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையிட்டு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: