ஜனாதிபதி தலைமையில் பிரதான வைபவம்--புத்தரிசி விழாவின் மட்டு.மாவட்ட வைபவம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஏப்ரல் மாதம் 3ம்
திகதி அனுராதபுரம் ஜெயபோதியில் நடைபெறவுள்ள புத்தரிசி பெருவிழாவில் இடம் பெறும் அன்னதானத்திற்கென
அரிசி சேகரிக்கும் மட்டக்களப்பு மாவட்ட புத்தரிசி விழா சேவைகள் அபிவிருத்தி நிலையத்தில்
கமநல அபிவிருத்தி அதிகாரி திருமதி இனோகா சிறீபதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(20) நடைபெற்றது.
கமநல சேவைகள் அபிவிருத்தி நிலைய உதவி ஆணையாளர் எஸ்.ஜெகந்நாதன் பிரதம அதிதியாக கலந்து
கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட விவாயிகளால் பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லிலிருந்து
பெறப்பட்ட அரிசியை அன்னதானத்திற்காக விவசாயிகள் வழங்கினர்.
சேகரிக்கப்படும் அரிசி அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பிரதி ஆணையாளர்
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment