14 Mar 2022

கல்முனை , சாய்ந்தமருது , மாளிகைக்காடு பிரதேசங்களில் வெள்ளரிப்பழம் வியாபாரம் களைகட்டியுள்ளது.

SHARE

 ( அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனை , சாய்ந்தமருது , மாளிகைக்காடு பிரதேசங்களில்  வெள்ளரிப்பழம் வியாபாரம் களைகட்டியுள்ளது.இப்பிரதேசத்தில் சுட்டெரிக்கும் வெயில் காணப்படுவதால் இந்த காலநிலைக்கு உடம்பின் சூட்டை தணிக்கும் வகையில் பிரதான வீதியில் பயணிக்கும் பலரும் இப்பழத்தினை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை , களுவாஞ்சிக்குடி , போன்ற இடங்களில் சேதனப்பசளை மூலம் உற்பத்தி செய்யப்படும் இப்பழமொன்று 60 ரூபா முதல் 300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

சைக்கிள்களிலும் , மோட்டார் சைக்கிள்களிலும் , சிறிய ரக லொறிகளிலும் இப்பழங்கள் மட்டக்களப்பின் பல பகுதிகளிலுமிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.



SHARE

Author: verified_user

0 Comments: