4 Feb 2022

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின நிகழ்வும் பசுமை இலங்கைக்கான அங்குரார்ப்பண நிகழ்வும்.

SHARE

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின நிகழ்வும் பசுமை இலங்கைக்கான அங்குரார்ப்பண நிகழ்வும்.

இலங்கை நாட்டின் 74 வது சுதந்திர தின நிகழ்வை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் அனுட்டித்தது. மு.ப 8.19 க்கு தேசிய கொடியேற்றி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்காக ஒரு நிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது. பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களினால் 74 வது சுதந்திர தினம் தொடர்பாக விசேட உரையாற்றப்பட்டது.                                                                                                  எருவில் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் "பசுமை - இலங்கை" நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு.

74 வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு எருவில் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில்  75 மரங்கள் நடப்படும்  "பசுமை - இலங்கை" அங்குரார்ப்பண நிகழ்வு அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களினால் "பசுமை “ இலங்கை" தொடர்பாக சிறப்புரை வழங்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்  மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக ஒரே நேரத்தில் 75 மரங்கள் நடப்பட்டது. இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த பசுமைக்கழக உறுப்பினர்கள் , கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு வாழ்த்துக்கள் .

தொடர்ச்சியாக 75 சூழல்சார் நிகழ்வுகள் பிரதேச செயலகத்தினால் திட்டமிடப்படுள்ளது.





















SHARE

Author: verified_user

0 Comments: