சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு தாழங்குடாவில் இடம்பெற்ற நிகழ்வு.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டுவியாழக்கிழமை (09) மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழங்குடாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வொன்று இடம்பெற்றது.
சமூக உள்வாங்கல் அமைப்பின் ஏற்பாட்டில் தாழங்குடா சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றிருந்தது. சமூக உள்வாங்கல் அமைப்பின் தலைவி செல்வி பே.விஜயலெட்சுமியின் ஏற்பாட்டில் உபதலைவர் ஆ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது கலைநிகழ்வுகளை அரங்கேற்றிய சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி பிள்ளைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இதன்போது பரிசுப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளின் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன், மாற்றுத்திறனாளி அமைப்பைச் சேர்ந்த மூத்த கலைஞர் இதன்போது பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து அதிதிகளினால் கௌரவமளிக்கப்பட்டதுடன் அதிதிகளின் உரையுடன் நிகழ்வானது நிறைவடைந்துள்ளது.
0 Comments:
Post a Comment