24 Nov 2021

மட்டக்களப்பு ஜீவனானந்தம் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பு ஜீவனானந்தம் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு நிகழ்வு.  

மட்டக்களப்பு ஜீவனானந்தம் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு நிகழ்வு  மட்டக்களப்பு கல்லடி விவேகாநந்தா மகளீர் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்றது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் முன்னாள் சுவாமி அமரர் ஜீவானந்தா அவர்களின் நினைவாக நிறுவப்பட்ட அறக்கட்டளை அமைப்பான ஜீவனானந்தம் சமூக நற்பணி மன்றத்தின் ஒருவருட நிறைவை முன்னிட்டு சிவானந்தா தேசிய பாடசாலை, கல்லடி விவேகாநந்தா மகளீர் பாடசாலை போன்றவற்றில் கடந்த வருடம் சாதாரணதரப் பாட்சையில் சிறந்த சித்திபெற்ற மாணவர்களுக்கு பசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது.

 கொவிட் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி

அமைப்பின் தலைவர் சங்கீதா குணசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், வவுணதீவு இலங்கை வங்கி முகாமையாளர் ரீ.பிரியதர்சன் மற்றும் போத தீவுப்பற்று அதிபர்கள், இராமகிருஷ்ண மிஷன் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மேற்கு வலய இருட்டுச்சோலைமடு மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் ஜீவனானந்தம் சமூக நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இராமகிருஷ்ண மிஷன் பழைய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.







SHARE

Author: verified_user

0 Comments: