1 Aug 2021

மட்டக்களப்பு - மங்களகமவில் வீட்டுக்கு வீடு "கப்ருக" வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

SHARE

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளூர் உற்பத்தினையும் கிராமிய மற்றும் சுயபொருளாதாரத்தினை அதிகரிக்கும் முகமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 

அதனடிப்படையில்  வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (01) மங்களகமவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனின் ஆலோசனைக்கமைவாக, ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மங்களகம  கிராமங்களைச் சேர்ந்த 100 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு தலா இரண்டு அவர்களுக்கு தென்னங்கன்றுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

 இந் நிகழ்வில் ஏறாவூர் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசு,

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.





 

SHARE

Author: verified_user

0 Comments: