11 Jul 2021

மனித பாவனைக்குதவாத பல இலட்சம் பெறுமதியான பெருமளவு உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளால் மீட்பு.

SHARE

மனித பாவனைக்குதவாத பல இலட்சம் பெறுமதியான பெருமளவு உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளால்  மீட்பு.

மனித பாவனைக்குதவாத காலாவதியான மற்றும் லேபல்  இடப்படாத பெருமளவு உணவுப் பொருட்கள் மட்டக்களபபு நகரில் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (11) காலை மட்டக்களப்பு நகரிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களை  முற்றுகையிட்ட சுகாதார அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் அங்கு விற்பனை செய்யப்பட்டுவந்த பெருமளவிவான பொதி செய்யப்பட்ட மரமுந்திரிகை விதைகள் கோதுமை மா கடலை பிஸ்கட்டுகள் முற்றும் காலாவதியான போத்தலில் அடைக்கப்பட்ட பானங்கள் என்வற்றை கைப்பற்றியுள்ளனர்.

சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்ற்றப்பட்ட பொருட்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமனறத்தில் ஆஜர் படுத்தபபடவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.








 

SHARE

Author: verified_user

0 Comments: