16 Apr 2021

தென்னை மரத்திலிருந்து சீவல் தொழிலாழி சடலமாக மீட்பு.

SHARE

தென்னை மரத்திலிருந்து சீவல் தொழிலாழி சடலமாக மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமதிலுள்ள உள்ள தோட்ட காணியொன்றில் அமைந்துள்ள தென்னை மரத்திலிருந்து வியாழக்கிழமை (15) ஆனொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

தேவாலய வீதி, மகிளுரைச் சேர்ந்த 59 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறிய சீவல் தொழிலாளியான அவர் மரத்தில் ஏறி மிக நீண்ட நேரமாகியும் கீழே இறங்கவில்லை என அவதானித்த போது தென்னை மரத்தின் வட்டிற்குள் மூச்சுப் பேச்சு அற்று அசைவற்ற நிலையில் இருந்ததைக் தோட்டக்காரர்கள் கண்டதனைத் தொடர்ந்து தோட்டக்காரர்கள், உள்ளிட்ட பலரும் இணைந்து மரத்திலிருந்தவலை ஒருவாறு கீழே இறக்கிக் கொண்டு சடுதியாக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த நபர் இறந்துள்ளதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்தன.

களுவாஞ்சிகுடி சுற்றுளஸலா நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி பொலிசார் குறித்த சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: