24 Mar 2021

பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ற்சிக்கு உதவிவரும் உதயகுமார் கல்வி நிலையம்.

SHARE

பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ற்சிக்கு உதவிவரும் உதயகுமார் கல்வி நிலையம்.

பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ற்சிக்கு உதயகுமார் கல்வி நிலையம் உதவிசெய்து பெரும் பங்காற்றி வருகின்றது. அந்த வகையில் உதயகுமார் கல்வி நிலையத்தினால்வளர்ச்சியின் உச்சநிலை கல்வி" எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கான  துவிச்சக்கர வண்டிகள்,பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான சீருடை,மற்றும் /மமே/வலய .பொ. சாதாரண தர மாணவர்களுக்குரிய ஆங்கில பாடசாலை மேம்பாட்டுக்கு உரிய கையேடுகள் தயாரித்து வழங்குவதற்கு நிதியுதவி என்பன அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

வளர்ச்சியின் உச்சநிலை கல்வி" எனும் தொனிப்பொருளில் உதயகுமார் கல்வி நிலையத்தினால் /மே/ற்சேனை .. பாடசாலையில்  மிகவும் வறுமை நிலையில்  கல்வி கற்கும்  இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான சீருடை, .மமே வலய .பொ. சாதாரண தர மாணவர்களுக்குரிய ஆங்கிலப்பாட மேம்பாட்டு கையேடுகள் தயாரித்து வழங்குவதற்கான நிதியுதவி என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர் .சிறிதரன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் .மமே. வலய ஆங்கல பாட சேவைக்கால ஆலோசகர் வே.திவாகரன், அக்னிச் சிறகுகள் தலைமை ஒருங்கிணைப்பாளரும், உதயகுமார் கல்வி நிலையத்தின் செயலாளருமான .ஜெயக்கொடி, அவ்வமைப்பின் பொருளாளர் திருமதி அனோஜன் விதுசா, இணைப்பாளான சோ.சிவாகரன், வெ.லக்சனா ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதன்பேது கலந்து கொண்டிருந்தனர்.

மாணவச் செல்வங்களை மேன்மேலும் கல்வியின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் பாதையை உருவாக்கிச் செல்ல வேண்டும் என்பதே உதயகுமார் கல்வி நிலையத்தின் அயராத ஒரே நோக்கமாகும் என உதயகுமார் கல்வி நிலையத்தின் செயலாளர் .ஜெயக்கொடி இதன்போது தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: