திருக்கோவில் ஷீரடி சாய் கருணாலயம் மகா கும்பாவிஷேகம்.
இவ் ஆலயத்தின் பூர்வாங்க
கிரியைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணியளவில் விநாயகர் வழிபாடு,
பிரதிஷ்டா சங்கல்யம், மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளன. இங்கு
எதிர்வரும் ஏப்பிரல் முதலாம் திகதி ஷீரடி சாய் நாதருக்கு பக்தர்கள் பால் காப்பு
சாத்தும் நிகழ்வு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து
02 ஆம் திகதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரையுள்ள சுபமுகூர்த் வேளையில் ஷீரடி சாய்
நாதர் பிரதிஸ்டை மகா கும்பாவிஷேக குட முழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளது. கும்பாவிஷேகத்தை
தொடர்ந்து 48 தினங்கள் தினமும் காலை 9 மணிக்கு மண்டலாபிஷேக பூசையும், சாய்நாதருக்கு
மங்கள ஆரத்தியும் நடைபெறும்.
ஈழத்து இசைக் கலைஞர்
ஜெயந்தன் கந்தப்புவின் இசையில் உருவான ஷீரடி சாய்நாதரின் பக்திப்பாடல் இறுவெட்டு
வெளியீட்டு விழா வவுனியாவில் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன்,
02 ஆம் திகதி கொழும்பு ஷீரடி சாய் மத்திய நிலையத்திலும் இந் நிகழ்வு நடைபெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment