மட்டக்களப்பு மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பெறுப்பேற்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க
மத அனுஸ்டானங்களுடன் சம்பிராய பூர்வமாக புதன்கிழமை(11) மாலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகராக இருந்த எம்.என்.எஸ்.மென்டிஸ் இரு தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச்
சென்ற நிலையில் அதற்கான வெற்றிடத்துக்கு சிரேஷட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க
பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து புதிய
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் உதவி
பொலிஸ் அத்தியட்சகர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்
கலந்து கொண்டு அவரை வரவேற்றனர்.
0 Comments:
Post a Comment