மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி.
மட்;டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த அடை மழை சனிக்கிழமை காலை (16) முதல் ஓய்ந்துள்ள போதிலும், மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதிக்குட்பட்ட, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதியை ஊடற்றுத்துப் மிக வெள்ளநீர்; பாய்ந்த வருவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்தவாரம் முழுவதும் மிகவும் பலத்த மழை காரணமாக மிகுந்த வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும், தற்போது மழை ஓய்ந்துள்ள போதிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருள் சூழ்ந்தவாறு காணப்படுகின்ற இந்நிலையில, மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் இரண்டு இடங்களை ஊடறுத்து வெள்ளநீர் மிகவும் வேகமாகப் பாய்;ந்து வருவதனால் அவ்வீதியைப் பயற்படுத்தும் பிரயாணிகளும். பொதுமக்களும் மிகுந்த அச்சத்தின் மத்தியில் பயணிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment