18 Jan 2021

வெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.

SHARE

வெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குடப்பட்ட வெல்லாவெளியில் திங்கட்கிழமை (18) புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பு.ரஜனிகாந் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) பொற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர், வீதி அபிவிருத்தித்திணைக்கள் பொறியியலாளர் சசிநந்தன்,  போரதீவுப்பற்றுப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

காலத்தின் தேவையறிந்து மிகுந்த தேவையான இடத்தில் இந்த எரிபொருள் நிலையம் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நோக்குடன் மிகுந்த நேர்மைத்தன்மையுடன். செயற்படும்போது எதிர்காலத்தில் மக்கள் இதனை அதிகாம் நாடி வருவார்கள் என இதன்போது கலந்த கொண்ட அதிதிகள் கருத்துத் தெரிவித்தனர்.










































































SHARE

Author: verified_user

0 Comments: