24 Jan 2021

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

SHARE

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளரி ஒன்றியத்தில் நடைபெற்றது.

முன்னதாக இந்நிகழ்வு திருகோணமலையில் அனுஸ்டிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் கொவிட் - 19 நிலமை காரணமாக இது மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து  கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில்  குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

சுகாதார விதி முறைகளிற்கு ஏற்றாற்போல் இடம்பெற்ற குறித்த இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .கலையரசன், மட்டக்களப்பு  மாவட்ட முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் .சுரேஸ், மட்டக்கப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள், பொது  அமைப்புகளின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள், எனபலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி நினைவுச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் இடம்பெற்றன.

2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை சுகிர்தராஜன் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.

மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக்காட்டின. இதனால் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்கள் ஏற்பட்டன.

சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு குருமண்வெளியை பிறப்பிடமாகக் கொண்ட சுகிர்தராஜன் அம்பாறை வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் நினைவுரைகளையாற்றினர்.














































































SHARE

Author: verified_user

0 Comments: