100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரீசோதனையில் எவருக்கும் தொற்றில்லை.
மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்களினால் ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலமான பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன .
ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலம் 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment