13 Dec 2020

கிழக்கில் முதலாவது கொரோனா வைரஸ் மரணம் சம்பவித்துள்ளது. வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கும் தொற்று.

SHARE

கிழக்கில் முதலாவது கொரோனா வைரஸ் மரணம் சம்பவித்துள்ளது. வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கும் தொற்று.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது கொரோனா தோற்றாளர் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அம்பாறை சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வியாழன் இரவு முல்லேரியா ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் உட்பட 3 தாதியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை வழமை போன்று இயங்க வைக்க முழு வீச்சிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  ஜி. சுகுணன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்திய  சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில்  ஞாயிற்றுக்கிழமை (13.12.2020) காலை 10 மணிவரை கடந்த 12 மணித்தியலத்தில் 37 பேர் புதிய தொற்றாளர்களாக உறுதிப்படுத்ததையடுத்து  மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொட கொத்தணியில் மட்டக்களப்பில் 97 பேரும் திருகோணமலையில் 18 பேரும் கல்முனையில் 419 பேரும் அம்பாறையில் 20 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவற்றுக்கு மேலதிகமாக மினுவான்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 4 பேரும், கந்தக்காடு தொடர்புடைய 5 பேரும், வெலிசறை கடற்படையுடன் தொடர்புடைய 11 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாகாணத்தில் ஐந்து சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கான சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: