1 Dec 2020

மட்.சிவானந்தா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை.

SHARE

மட்.சிவானந்தா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை.

மட்.சிவானந்தா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவர்கள் அண்மையில் வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் சிவானந்தா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) கடந்த காலங்களை விட இவ்வருட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறச் செய்து மாபெரும் சாதனையை நிலை நாட்டியுள்ளது. 

அந்த வகையில் அப்பாடசாலையில்; 193 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டதில் 3ஆம் இடத்தை த.நவப்பிரசாந் தக்கவைத்து அப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்பாடசாலையில் மொத்தமாக 20 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுள்ளதுடன், 70 புள்ளிக்குமேல் 97.4 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இம்மாணவர்கள் இச்சாதனையை நிகழ்த்துவதற்ககு உறுதுணையாக பாடசாலை அதிபர் ரி.யசோதரன் தலைமையிலான பாடசாலை முகாமைத்துவ குழுவும் குறிப்பாக தரம் ஐந்து கற்பிக்கும், ஆசிரியர்களும் ஏனைய ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் அத்துடன் பாடசாலை பழைய மாணவர் சங்கமும், பாடசாலை அபிவிருத்தி குழுவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: