22 Dec 2020

மட்டு.தாளங்குடாவில் சக்தி வாய்ந்த கைக்குண்டு மீட்பு.

SHARE

மட்டு.தாளங்குடாவில் சக்தி வாய்ந்த கைக்குண்டு மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

ஆரையம்பதி தாளங்குடா கடற்கரை வீதியில் அடர்ந்த காட்டுப்பகுதியிலுள்ள வெற்றுக் காணியொன்றை திங்கட்கிழமை (21) கூலித் தொழிலாளியொருவர் துப்புரவு செய்து கொண்டிருந்தபோதே பொலித்தீனினால் சுற்றப்பட்ட நிலையில் இக்கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளையும், மேலதிக நடவடிக்கைகளையும், மேற்கொண்டுள்ளனர். 








SHARE

Author: verified_user

0 Comments: