26 Dec 2020

சுனாமி பேரலையின் 16வது ஆண்டு நினைவு தின தினத்தையொட்டி காத்தான்குடியில் விஷேட பிராத்தனை

SHARE

காத்தான்குடியில் சுனாமி பேரலையின் 16வது ஆண்டு நினைவு தின தினத்தையொட்டி இன்று(26.12.2020) சனிக்கிழமை  விஷேட பிராத்தனை மற்றும் புனித அல்குர் ஓதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு காத்தான்குடியில் சுனாமி பேரலையின் 16வது ஆண்டு நினைவு தின தினத்தையொட்டி இன்று(26.12.2020) சனிக்கிழமை விஷேட பிராத்தனை மற்றும் புனித அல்குர் ஓதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

புதிய காத்தான்குடி அல் அக்ஷா ஜும்ஆப் பள்ளிவாயலில் இன்று அதிகாலை சுபஹ் தொழுகையின் பின்னர் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

பள்ளிவாயலின் இமாம் மௌலவி ஏ.எல்;.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளிவாயலில் மற்றுமொரு இமாம் மௌலவி அல்ஹாபிழ் எம்.இல்ஹாம் உட்பட பள்;ளிவாயல் நிருவாகிகள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது விஷேடமாக சுனாமி பேரலையினால் உயிரிழநதவர்களின் நினைவாக புனித குர்ஆன் ஓதப்பட்டதுடன் பள்ளிவாயலின் இமாம் மௌலவி அல்ஹாபிழ் எம்.இல்ஹாம் பிராத்தனையை நடாத்தினார்.








SHARE

Author: verified_user

0 Comments: