22 Dec 2020

மட்டக்களப்பில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் 118 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கிவைக்கப்பு.

SHARE

மட்டக்களப்பில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் 118 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கிவைக்கப்பு.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுயதொழிலில் ஈடுபடும் 118 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மணமுனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப்பயனாளிகளுக்கான ஆடுகளை வழங்கிவைத்தார். 

பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சினால் சுமார் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 118 பயனாளிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. 

இதன் முதல்கட்டமாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் 30 பயணாளிகளுக்கான ஆடுகளை திங்கட்கிழமை(21) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். 

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாக கணக்காளர் எஸ்.புவனேஸ்வரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர். 













SHARE

Author: verified_user

0 Comments: