தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் அன்று தொடக்கம் இன்றுவரை குரல்கொடுத்தவனாகவே இருந்து வருகின்றேன், அவர்களது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன். என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் சனிக்கிழமை (08) கடுக்காமுனையில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவைத்திருந்தார்.
அவர் மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்…
இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் வாதப்பிரதி வாதங்களை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சரிடம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டதை கேலிகூத்தாக எடுத்து பேசி வருகின்றமையினை ஊடகங்கள் வாயிலாக எம்மால் அறிய முடிகின்றது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசலாம், பிரதமரிடம் பேசலாம், நீதி அமைச்சரோடும் பேசவேண்டும். கைதிகளின் விடுதலை தொடர்பில் நிதி அமைச்சருக்கும் பங்கு இருக்கின்றது, அவர் இந்நாட்டினுடைய நீதித்துறைக்கு பொறுப்பானவர் 300இகும் மேற்பட்ட உயிர்கள் பயங்கரவாத தாக்குதலால் கடந்த ஏப்ரல் 21இல் வெடித்து சிதறி பலியாகினர். அந்தப் பயங்கரவாதத்தை தடுக்காமல் இருந்த அரசாங்கத்தை, மக்கள் விடுதலை முன்னணியினர் அந்நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை எங்களுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்.
ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், பத்து அல்லது இருபது அரசியல் கைதிகளை விடுதலை செய்தால்தான் வாக்களிப்போம் என்ற நிபந்தனைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்திருந்தால் கடந்த 4, அரை வருடங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வினை கடந்த அரசாங்கத்திடமிருந்து எமது தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
0 Comments:
Post a Comment