16 Feb 2026

செட்டிபாளையம் அருள்மிகு சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள்

SHARE

செட்டிபாளையம் அருள்மிகு சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவு பிரசத்தி பெற்ற செட்டிபாளையம் அருள்மிகு சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் சிவராத்திரி விரத வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. 

ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(15.02.2026) இரவு இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, அடியார்களால் சிவலிங்கத்திற்கு பால் அபிசேகம் செய்யும் புனித கைங்கரியம் இடம்பெற்றது. 

ஆலயத்தில் இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி விரத விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.  ஆலய குரு சிவ ஸ்ரீ குணேந்திரன் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

















SHARE

Author: verified_user

0 Comments: