23 Nov 2020

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளும் திங்கட்கிழமை மீண்டும் திறப்பு!

SHARE

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளும் திங்கட்கிழமை மீண்டும் திறப்பு!

கொரோனா இரண்டாம் அலை பீதியின் காரணமாக மூடப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை மீண்டும் (23)ஆரம்பமாகின.

இதன்படி தனிமைப்படுத்லுக்குட்படுத்தப்படாத பகுதிகளில் நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளுக்காக திங்கட்கிழமை முதல் தரம் 6 முதல்  13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களிலுமுள்ள தரம் 6 தொடக்கம் 13 வரையிலான சகல பாடசாலைகளிலும் அதிகமான மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளைப்பேணி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளித்திருக்கின்ற இந்நிலையில் பாடசாலைக்கு வரும், மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவரும் உடல் வெப்பநிலை அவதானிக்கப்பட்டு, கைககள் கழுவி, முகக்கவசம் அணிந்து வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.  

























SHARE

Author: verified_user

0 Comments: