போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவளத்துனை சேவை வழங்க துரித தொலைபேசி இலக்கம் 1927 அறிமுகம். போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துனை ஆலேசனை தொலைபேசி துரித இலக்கமான 1927 இன் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு அமைச்சின்கீழ் இயங்கி வரும் தேசிய அபாயகர ஒடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதன் பாவனையால் துன்பப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்குமான உளவள ஆலேசனைகள் தொடராக வழங்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை காரணமாக 1927 என்ற துரித இலக்கம் அரசினால் அறிமுகம் செய்யப்பட்டு உளவளத்துனை சேவை வழங்கப்படடு வருகின்றது.
போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிலிருந்து விடபடுவதற்கும், அப்பாவனையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துன்பப்படுபவர்கள் இவ்விலக்கத்தினூடா உளவளத்துனை ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளமுடியுமென தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மாவட்ட இணைப்பாளர் ஜீ. விஜயதர்சன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரித்தார்.
0 Comments:
Post a Comment