9 Oct 2020

மட்டு.மாவட்டத்தில் அரச அறிவுறுத்தல்களுக்ககமைய இடம் பெற்ற ஜும்ஆத் தொழுகை

SHARE

மட்டு.மாவட்டத்தில் அரச அறிவுறுத்தல்களுக்ககமைய  இடம் பெற்ற ஜும்ஆத் தொழுகை.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஜும்ஆத் தொழுகையின் போது குறைந்த எண்ணிக்கையிலான பொது மக்களே பள்ளிவாயல்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய ஜும்ஆத் தொழுகையில் 50 பேர் மாத்திரமே அனுமதிக்க வேண்டுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்களில் இடம் பெற்ற ஜும்ஆத் தொழுகையின் போது பொது மக்களில் 50 பேரே தொழுகைக் காக அனுமதிக்கப்பட்டனர்.

ஜும்ஆத்தொழுகைக்காக நேர காலத்தோடு வந்த பொது மக்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

சமூக இடைவெளியைப் பேணி தொழுகை நடாத்தப்பட்டதுடன் முகக்கவசமும் அணிந்திருந்தனர். இதன் போது ஜும்ஆப்பிரசங்கமும் ஜும்ஆத் தொழுகையும் 30 நிமிடங்கள் மாத்திரமே இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: