6 Oct 2020

போதைப்பொருள் விற்பனையிலும் வைத்திருந்த குற்றத்திற்காக 1488 பேருக்கு சட்டநடவடிக்கை.

SHARE

போதைப்பொருள் விற்பனையிலும் வைத்திருந்த குற்றத்திற்காக 1488 பேருக்கு சட்டநடவடிக்கை.மட்டக்களப்பு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்புவு செயலணியின் மாவட்ட மட்ட கூட்டம் இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்~pனி ஸ்ரீகாந்த தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவான இளைஞர்கள் ஈக்கப்பட்டு வருவதாக அதிலும் பாடசாலை மாணவப்பருவத்தினர்தான் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டு வருவதும் அவதாநிக்க கூடியதாகவும் அதிலும் 13வயது முதல் 17வயதினர் தான் தங்களுக்கு போதிய விழிப்புனர்வு பெற்றோரின் கண்கானிப்பின்றி வழிதவறுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இவ்வாண்டு 2020-01-01 முதல் இன்று வரையும் கேரோயின் வைத்திருந்த குற்றத்திற்காக 190பேரும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 28பேரும் கஞ்சா வைத்திருந்த 245 பேரும் கொடா வைத்திருந்த குற்றத்திற்காக 155பேரும் கசிப்பு உற்ப்பத்தியிலும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என 870பேரும் மொத்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1488 பேர் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் இருந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்கும் அதிலும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் முதல் முறையாக முன்னெடு;ப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.  

இன்று மாவட்டத்தில் செயல்ப்பட்டுவருகின்ற மதுவரி திணைக்களம் சமூக சீர்திருத்த பிரிவினர் கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே.அருளானந்தம் வைத்திய கலாநிதி கே.அருள்யோதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வலய கல்வி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி ரஐணி உதயாகரன் சிறச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் எஸ்.மோகன் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் என பலரும் கலந்து கொண்டனர். 








SHARE

Author: verified_user

0 Comments: