உலகளாவிய இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்த முடிந்ததுபோல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களோடு தொடர்பான பாதாள உலகக் குழுக்களை அடியோடு அழிக்க, ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது.
இவ்வாறான சமூக விரோத செயல்கள் மற்றும் கொவிட் 19 ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் பெரிதும் பாராட்டப்பட்டாலும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்பாக அரசிடம் கேட்டுக்கொள்வது யாதெனில், மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் குற்றவாளிகளை இல்லாமல் செய்வதற்கான வழிமுறையை தீவிரப்படுத்தவும் வலுப்படுத்தவும், ஒரு முறையான பொறிமுறையினை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும்.
எவ்வாறாயினும், கொரோனா காரணமாக நமது பொருளாதாரம் ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது என்பதையும், அதனை நிவர்த்திக்க உடனடியாக காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நமது நாடு அதலபாதாளத்திற்குள் விழுந்துவிடக்கூடும் என்பதையும் மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். கொரோ
எவ்வாறாயினும், எங்கள் நாட்டினது பொருளாதார இறக்கங்கள் அனைத்தும் கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டது என்ற கருத்தோடு நான் உடன்படவில்லை. சுதந்திரத்திற்
எனது பார்வையில், தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மக்களுக்கு பொருட்களை வழங்கியது மட்டும் அந்த அரசாங்கங்களின் தோல்விக்கு காரணமில்லை. மாறாக அவ் அரசாங்கங்கள், மக்கள் போதுமான வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளினை எடுத்திருக்கவில்லை என்பதேயாகும். ஆனால், அதிகாரத்
மட்டக்களப்பு மாவட்டம் நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகும். 2018 இல் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் படை கணிப்பீட்டின்படி, தொழிலா
இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வாக சிறந்த திட்டங்களுக்கு, மாவட்டத்திற்கா
இம் மாவட்டத்தின் பொருளாதாரமானது விவசாயம், மீன்வளம், விருந்தோம்
அரசியல் அதிகாரப் பகிர்வு என்பது, வளங்களை வழங்காமல் அர்த்தமுள்ளதாக்க முடியாது என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன். 13 ஆவது திருத்தத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு பொறிமுறையானது, வளங்கள் இல்லாததால் இலக்குகளை அடைய முடியவில்லை. 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமே அதிகாரப் பகிர்வால் பயனடைகின்றன' என்ற தவறான கருத்து ஒன்று உள்ளது என்பதையும், நான் இங்கு குறிப்பிட வேண்டும். அதிகாரப் பகிர்வு அனைத்து மாகாண மக்களுக்கும் தங்களது வட்டாரங்கள் சம்பந்தப்பட்ட அபிவிருத்தி பிரச்சினைகளை தாங்களே தீர்க்க வாய்ப்பளிக்கிறது. இது ஒரு வெள்ளை யானை அல்ல. ஆனால், ஜனநாயக ஆட்சியின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மாகாண சபை அமைப்பின் நோக்கம் இலக்கை அடையத் தவறியதன் காரணமாக, இப்போது மிகவும் பேசுபொருளான அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேசுவதற்கு என்னைத் தூண்டுகிறது. இப்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கான மசோதா அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலவற்றைத் தவிர வரைவு விதிகளின்படி, 19 ஆவது திருத்தத்தின் அனைத்து நல்ல விதிகளும் ரத்து செய்யப்படும் நிலையே 20 ஆம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 19 ஆவது திருத்தத்தினை உருவாக்கியவர்கள், தனிநபர்களைக் குறிவைக்கும் நோக்கத்துடனேயே அரசியலமைப்பு திருத்தத்தில் சில விதிகளைச் சேர்த்ததன் மூலம், ஒரு அபாயகரமான தவறைச் செய்தார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த அரசாங்கத்திற்கு நடைபெற்ற 2020 பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் வழங்கிய ஆணையானது, கடந்த கால அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை சிறையில் அடைக்கவும், எந்தவொரு கட்சிக்கும் தேவையான நன்மைகளை கொடுப்பதற்கும் நாட்டின் அடிப்படைச் சட்டத்தைத் திருத்துவது முந்தைய அரசாங்கத்தால் செய்யப்பட்டது போல அல்லாமல், வாக்காளர்கள் எதனை எதிர்பார்த்து ஆணை வழங்கினார்களோ அதனை முன்னிலைப்படுத்தி, அரசியலமைப்பு மாற்றத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவது தொடர்பான விதிகளில் கொண்டு வரப்படவுள்ள திருத்தம், ஒரு விரிவான ஆலோசனை செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என நான் உறுதியாகக் கூறுகிறேன்.
தேர்தல் சீர்திருத்தங்கள் திட்டமிடப்பட்டால், விகிதாசார பிரதிநிதித்துவத்தின் முற்போக்கான அம்சங்கள் தக்கவைக்கப்பட வேண்டும். விகிதாசார பிரதிநிதித்துவம் சிறிய கட்சிகளுக்கு விமோசனம் அளித்தது. தேர்தல் முறை சீர்திருத்தங்கள், உரிய விடாமுயற்சியின் பின்னர் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பு திருத்தத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை சபையில் உங்களுக்கு இருப்பதால், இரும்பு சூடாக இருக்கும்போது அதில் அடிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். எங்கள் வாக்காளர்கள் நன்கு அறிந்தவர்கள் மற்றும் நன்கு படித்தவர்கள். ஒரு முறை அல்ல, பல முறை சர்க்கரை படலையினை மாத்திரையில் இருந்து வேறுபடுத்தும் திறன் கொண்டவர்கள் என்று அவர்கள் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறுபான்மை சமூகங்கள் பழங்காலத்திலிருந்தே இந்த நாட்டில் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்கின்றன. சிறுபான்மை மக்களினது சமநிலையைத் தொந்தரவு செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும், எப்போதும் சரிசெய்ய முடியாத சேதங்களைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்பது வரலாறாகும். 1972 இல் குடியரசுக் கட்சி அரசியலமைப்பு இயற்றப்பட்டபோது, சோல்பரி அரசியலமைப்பை இரத்து செய்தமையினை நான் இங்கு மேற்கோள் காட்டக்கூடிய சிறந்த எடுத்துக்காட்டாகும். சோல்பரி அரசியலமைப்பின் பிரிவு 29 (2) இன் கீழ், தங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு பாதுகாப்பு இல்லாமல் ஆக்கப்படுவதை சிறுபான்மையினர் உணர்ந்தனர். ஆனால், 1972 அரசியலமைப்பின் வடிவமைப்பாளர், சோல்பரி அரசியலமைப்பின் பிரிவு 29 (2) ஆல் தடைசெய்யப்பட்ட பாராளுமன்ற சட்டமன்ற அதிகாரத்திற்கு எந்தவொரு கட்டுப்பாட்டினையும் விதித்திருக்கவில்லை.
அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அகற்றுவதன் விளைவாக ஏற்படும் உணர்வு பூர்வமான விளைவுகளை, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு இடையிலான இருமுனை மயமாக்கலின் விதைகளாகக் காணலாம்.
எனவே, எதிர்காலத்தில் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள சட்டவல்லுனர்கள், அரசியலமைப்பி
0 Comments:
Post a Comment