11 Sept 2020

அரசியலமைப்பிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அகற்றுவதன் விளைவாக சமூகங்கள் துருவமயப்படுத்தப்படும்’ - பாராளுமன்றில் ஹாபிஸ் நஸீர் எம்.பி!

SHARE
அரசியலமைப்பிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அகற்றுவதன் விளைவாக சமூகங்கள் துருவமயப்படுத்தப்படும் - பாராளுமன்றில் ஹாபிஸ் நஸீர் எம்.பி!

நான் இன்று இந்த உயரிய சபையினை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுத்தமைக்காகமட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்துகின்றேன். வாக்காளர்கள் அவர்களின் விருப்பத் தெரிவினை எனக்கு ஆதரவாகப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், நான் பாராளுமன்ற உறுப்பினராக இந்த உயரிய சபையில், இன்று உரையாற்றுவது சாத்தியமில்லை.

நமது நாடு உட்பட உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா தலைதூக்குகின்றதொரு காலகட்டத்தில், எனது முதல் உரையை நான் இவ்வுயரிய சபையில் நிகழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால்,  கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த முடிந்தமையினால் நாம் இன்று நிம்மதியாக வாழ்கின்றோம். கொவிட் 19 மிகச் சிறப்பாகவிரைவாக கட்டுப்படுத்தப்பட்டுஇன்று நமது நாடு உலகில் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது. 

உலகளாவிய இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்த முடிந்ததுபோல்போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களோடு தொடர்பான பாதாள உலகக் குழுக்களை அடியோடு அழிக்க, ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை  பாராட்டத்தக்கது.

 இவ்வாறான சமூக விரோத செயல்கள் மற்றும் கொவிட் 19 ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் பெரிதும் பாராட்டப்பட்டாலும்நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்பாக அரசிடம் கேட்டுக்கொள்வது யாதெனில்மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் குற்றவாளிகளை இல்லாமல் செய்வதற்கான வழிமுறையை தீவிரப்படுத்தவும் வலுப்படுத்தவும், ஒரு முறையான பொறிமுறையினை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும்.

எவ்வாறாயினும்கொரோனா காரணமாக நமது பொருளாதாரம் ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது என்பதையும்அதனை நிவர்த்திக்க உடனடியாக காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால்நமது நாடு அதலபாதாளத்திற்குள் விழுந்துவிடக்கூடும் என்பதையும் மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். கொரோனா தொற்றுநோய் பரவலால் நாடு முற்றாக முடக்கப்பட வேண்டி இருந்ததன் அவசியத்தினை நாம் அனைவரும் அறிந்திருப்பதனால்பலவீனமான பொருளாதாரத்தை கொண்டிருந்த நாம்மீண்டும் ஒரு குறுகிய காலத்தினுள் பொருளாதாரத்தில் இருந்த நிலையிலிருந்து தாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 எவ்வாறாயினும்எங்கள் நாட்டினது பொருளாதார இறக்கங்கள் அனைத்தும் கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டது என்ற கருத்தோடு நான் உடன்படவில்லை.  சுதந்திரத்திற்குப் பின்னர்நமது பொருளாதாரம் அவ்வப்போது ஏற்பட்ட சில இடைவெளிகளைத் தவிர தொடர்ச்சியாக மந்தமாகவே உள்ளது. இந்த நாட்டின் மக்கள் ஒருபோதும் பொருளாதாரம் தொடர்பில் சிறந்த மற்றும் நியாயமான உடன்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை. நமது மக்கள் எப்போதும் பொருளாதார முடக்கத்திலேயே இருக்கிறார்கள்.  ஆயினும்கூட அவர்கள் ஒரு சிறந்த உடன்பாட்டிற்கு தகுதியானவர்கள்.

எனது பார்வையில்தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மக்களுக்கு பொருட்களை வழங்கியது மட்டும் அந்த அரசாங்கங்களின் தோல்விக்கு காரணமில்லை. மாறாக அவ் அரசாங்கங்கள்மக்கள் போதுமான வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளினை எடுத்திருக்கவில்லை என்பதேயாகும்.  ஆனால்அதிகாரத்துவத்தால் சேவையை வழங்குவதனாலும் பொருளாதாரத்தின் இந்த பரிதாபகரமான தோல்விக்கு காரணமாக இருந்துள்ளது. மக்களுக்கு சேவை வழங்குவதினுடைய அளவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தினால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகஅரசாங்கம் மேலும் கால தாமதமின்றிமாவட்ட அடிப்படையிலான முதலீடு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களினை அவசரமாக ஆரம்பிக்க வேண்டும் என நான் பரிந்துரை செய்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டம் நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகும். 2018 இல் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் படை கணிப்பீட்டின்படிதொழிலாளர் படையில் 6.8% பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லாமல் உள்ளனர்.  மன்னார் மாவட்டம் மட்டுமே மட்டக்களப்பை (7.1%) விட மோசமான விகிதத்தை பதிவு செய்கிறது. இளைஞர்களின் வேலையின்மைதேசிய சராசரியை விட அதிகமாக மட்டக்களப்பில் காணப்படுகின்றது. போதைப்பொருள் பாவனை அதிகமாக இருப்பதன் காரணமாகவேலைவாய்ப்பின்மை வீதம் அதிகமாக உள்ளதாக  சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2016 இல் மேற்கொள்ளப்பட்ட வீட்டு வருமானம் மற்றும் செலவின கணக்கெடுப்பின் படிதலைக்குரிய வறுமை தரப்படுத்தலில் 25 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வாக சிறந்த திட்டங்களுக்கு, மாவட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடும் போது முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன். இதன் மூலம்மாவட்ட செயல்திறன் இலக்குகளை தேசிய மட்டத்துடன் இணைக்க முடியும் என்பதை மேலும் குறிப்பிட விரும்புகின்றேன். இதனால் 2016 முதல் 2019 வரைபடிப்படியாக 4.5% முதல் 2.3% வரை மிக மோசமாக குறைந்து வருகின்ற தேசிய வளர்ச்சி விகிதத்திற்கு இது  ஊக்கமளிக்கும். 

இம் மாவட்டத்தின் பொருளாதாரமானது விவசாயம்மீன்வளம்விருந்தோம்பல் மற்றும் கைத்தொழில் போன்ற முக்கியமான துறைகளிலேயே தங்கியுள்ளது. இந்தத் தொழில்களின் திறனை உகந்ததாகப் பயன்படுத்தஅரசியல் மற்றும் அதிகாரத்துவ மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு உந்துதலை வழங்குமாறு நான் அரசாங்கத்தை மனதார கேட்டுக்கொள்கின்றேன். நான் மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில்இந்தத் துறைகளில் நியாயமான வளர்ச்சியைப் பதிவு செய்ய முயற்சித்தோம்ஆனால்அது மாகாண நிர்வாகத்திற்கு போதுமான நிதி ஆதாரங்கள் வழங்கப்படாததால் அம்முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டன.

அரசியல் அதிகாரப் பகிர்வு என்பதுவளங்களை வழங்காமல் அர்த்தமுள்ளதாக்க முடியாது என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன்.  13 ஆவது திருத்தத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு பொறிமுறையானதுவளங்கள் இல்லாததால் இலக்குகளை அடைய முடியவில்லை. 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமே அதிகாரப் பகிர்வால் பயனடைகின்றனஎன்ற தவறான கருத்து ஒன்று உள்ளது என்பதையும், நான் இங்கு குறிப்பிட வேண்டும். அதிகாரப் பகிர்வு அனைத்து மாகாண மக்களுக்கும் தங்களது வட்டாரங்கள் சம்பந்தப்பட்ட அபிவிருத்தி பிரச்சினைகளை தாங்களே தீர்க்க வாய்ப்பளிக்கிறது.  இது ஒரு வெள்ளை யானை அல்ல. ஆனால்ஜனநாயக ஆட்சியின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 மாகாண சபை அமைப்பின் நோக்கம் இலக்கை அடையத் தவறியதன் காரணமாகஇப்போது மிகவும் பேசுபொருளான அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேசுவதற்கு என்னைத் தூண்டுகிறது.  இப்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கான மசோதா அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும்சிலவற்றைத் தவிர வரைவு விதிகளின்படி, 19 ஆவது திருத்தத்தின் அனைத்து நல்ல விதிகளும் ரத்து செய்யப்படும் நிலையே 20 ஆம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 19 ஆவது திருத்தத்தினை உருவாக்கியவர்கள்தனிநபர்களைக் குறிவைக்கும் நோக்கத்துடனேயே அரசியலமைப்பு  திருத்தத்தில் சில விதிகளைச் சேர்த்ததன் மூலம்ஒரு அபாயகரமான தவறைச் செய்தார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த அரசாங்கத்திற்கு நடைபெற்ற  2020 பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் வழங்கிய ஆணையானதுகடந்த கால அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை சிறையில் அடைக்கவும்எந்தவொரு கட்சிக்கும் தேவையான நன்மைகளை கொடுப்பதற்கும் நாட்டின் அடிப்படைச் சட்டத்தைத் திருத்துவது முந்தைய அரசாங்கத்தால் செய்யப்பட்டது போல அல்லாமல்வாக்காளர்கள் எதனை எதிர்பார்த்து ஆணை வழங்கினார்களோ அதனை முன்னிலைப்படுத்தி, அரசியலமைப்பு மாற்றத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். 

 சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவது தொடர்பான விதிகளில் கொண்டு வரப்படவுள்ள திருத்தம்ஒரு விரிவான ஆலோசனை செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என நான் உறுதியாகக் கூறுகிறேன்.

 தேர்தல் சீர்திருத்தங்கள் திட்டமிடப்பட்டால்விகிதாசார பிரதிநிதித்துவத்தின் முற்போக்கான அம்சங்கள் தக்கவைக்கப்பட வேண்டும்.  விகிதாசார பிரதிநிதித்துவம் சிறிய கட்சிகளுக்கு விமோசனம் அளித்தது. தேர்தல் முறை சீர்திருத்தங்கள்உரிய விடாமுயற்சியின் பின்னர் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பு திருத்தத்திற்கு தேவையான  மூன்றில் இரண்டு பெரும்பான்மை சபையில் உங்களுக்கு இருப்பதால்இரும்பு சூடாக இருக்கும்போது அதில் அடிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்.  எங்கள் வாக்காளர்கள் நன்கு அறிந்தவர்கள் மற்றும் நன்கு படித்தவர்கள். ஒரு முறை அல்லபல முறை சர்க்கரை படலையினை மாத்திரையில் இருந்து வேறுபடுத்தும் திறன் கொண்டவர்கள் என்று அவர்கள் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறுபான்மை சமூகங்கள் பழங்காலத்திலிருந்தே இந்த நாட்டில் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்கின்றன. சிறுபான்மை மக்களினது  சமநிலையைத் தொந்தரவு செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும்எப்போதும் சரிசெய்ய முடியாத சேதங்களைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்பது வரலாறாகும்.  1972 இல் குடியரசுக் கட்சி அரசியலமைப்பு இயற்றப்பட்டபோதுசோல்பரி அரசியலமைப்பை இரத்து செய்தமையினை நான் இங்கு மேற்கோள் காட்டக்கூடிய சிறந்த எடுத்துக்காட்டாகும்.  சோல்பரி அரசியலமைப்பின் பிரிவு 29 (2) இன் கீழ், தங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு பாதுகாப்பு இல்லாமல் ஆக்கப்படுவதை சிறுபான்மையினர் உணர்ந்தனர்.  ஆனால், 1972 அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்சோல்பரி அரசியலமைப்பின் பிரிவு 29 (2) ஆல் தடைசெய்யப்பட்ட பாராளுமன்ற சட்டமன்ற அதிகாரத்திற்கு எந்தவொரு கட்டுப்பாட்டினையும் விதித்திருக்கவில்லை.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அகற்றுவதன் விளைவாக ஏற்படும் உணர்வு பூர்வமான விளைவுகளை, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு இடையிலான இருமுனை மயமாக்கலின் விதைகளாகக் காணலாம்.

எனவே, எதிர்காலத்தில் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள சட்டவல்லுனர்கள், அரசியலமைப்பிலுள்ள மிகவும் முக்கியமானதும் உணர்வுபூர்வமானதுமான  விடயங்களினை  திருத்த முனையும் போது, மிகவும் கவனமாக அவற்றை மேற்கொள்ளுமாறு நான் மனதாரக கேட்டுக்கொள்கின்றேன்.





SHARE

Author: verified_user

0 Comments: