15 Sept 2020

சுற்றுலாத்துறை அமைச்சு செலாளர் திருமலை வருகை

SHARE


(ராஜ்)

திருகோணமலையில் சுற்றுலாத்துறையை  அபிவிருத்தி செய்வது தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காகவும்  S4IG  யினால்  முன்னெடுக்கப்பட்டுவரும்  சமூக மட்ட  சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்கவும் சுற்றுலா மற்றும் விமானப்பயண அமைச்சின் அதகாரிகள் (13-9-2020) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் .

இதன் போது  S4IG னால் தயாரித்து வழங்கப்பட்ட சுற்றுலா தகவல் மைய  அமைப்பது 

தொடர்பான  இடஆய்வு இடம்பெற்றதுடன் , அகம் நிறுவனத்தினால்  S4IG யின் நிதி பங்களிப்புடன் இடம்பெறும் சமூக மட்ட  சுற்றுலா குழுக்களையும் பார்வையிட்டனர்.

அத்துடன் குச்சவெளி பிரதேதசத்தில் சுற்றுலா அமைச்சு சொந்தமான காணிகளில் இடம் பெறும் அபிவிருத்தியையும் பார்வையிட்டனர் .
இக்குழு வில் 

இலங்கை சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ. கெட்டியாரச்சி  மற்றும் அதிகாரிகள்  உடன் கிழக்கு மாகாண  பிரதம செயலாளர்  .துசித்தா பி. வன்னியசிங்க  கிழக்கு மாகாண சுற்றுலா் பணியக தலைவர் ஹரி மற்றும் முகாமையாளர் திரு ஞானசேகரன் ,மற்றும் S4IG மாவட்ட முகாமையாளர் திரு எம் .மதியழகன் அகம் நிறுவன இணைப்பாளர் பொ. சற்சிவானந்தம்   ஆகியோரும் கலந்து கொண்டனர் 





SHARE

Author: verified_user

0 Comments: