இலங்கையின் 164 வது பொலிஸ் தினம் வியாழக்கிழமை (03) கிழக்கு மாகாணத்தில் உணர்வு பூர்;வமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பொலிஸ் நிலையங்களிலும் சமுக நல வேலைத் திட்டங்களும் சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பிரதான நிகழ்ச்சியாக இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியோரத்தில் மரம் நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வாவியோரம் முழுமையாக தூய்மைப் படுத்தப்பட்டது.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தயட்சகர் நுவன் மெண்டிஸ் மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி எச்.ஹெட்டியாராச்சி உட்பட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் இதன்போது பங்கு கொண்டனர்.
0 Comments:
Post a Comment