16 Aug 2020

முச்சக்கரவண்டி விபத்து.

SHARE

முச்சக்கரவண்டி விபத்து.மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிராங்குளம் விஷ்னு வித்தியாலயத்திற்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

புணாணையிலிருந்து கோவில்போரதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது. இந்நிலையில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 3 பெண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டள்ளது.








SHARE

Author: verified_user

0 Comments: