25 Aug 2020

மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி உரிமை தொடரபான மாவட்ட மட்ட கலந்துரையாடல்.

SHARE


(ராஜ்)

மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி உரிமை தொடரபான மாவட்ட மட்ட கலந்துரையாடல்.

நவஜீவன நிறுவனத்தினால் முன்னெடுத்து வருகின்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உட்படுத்தல் கல்விக்கான திருகோணமலை மாவட்ட ரீதியான குழுவின் கலந்துரையாடல் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இன்று (25)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் க.பிரதீபன் மற்றும் மாகாண கல்வித் திணைக்கள உதவிக கல்விப் பணிப்பாளர் டபில்யூ.தர்மசிறி நவஜீவன நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் முதிதகுமார மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஜீவிதன் சுகந்தினி  என பலர் கலந்து கொண்டிருந்தனர்;.

இதன் போது திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, தம்பலகாமம், வெருகல், பட்டணமும் சூழலும், கந்தளாய் ஆகிய பிரதே செயலகபரிவுகளில் இருந்து மாற்றுத் திறளாளி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பாடாலை செல்லாத வேண்டிய வயதில் பாடசாலை கல்வி கிடைக்காமல் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களை அடையாளம் காணுதல் அவர்களுக்கான கல்வி உரிமையினை வழங்குதல்  தொடர்பாக பல விடயங்கள் இதன் போது ஆராயபட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: