1 Jul 2020

கிழக்கு மாகாணத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

SHARE
கிழக்கு மாகாணத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு பிரதேசத்தில் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.எம்.பி.வீரசேகர அதிதியாக கலந்து கொண்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

இன்று திறந்து வைக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் தொடர்பாககருத்து தெரிவித்த கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்டஉதவி ஆணையாளர் கே.ஜெகநாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப் பொருட்களான கல், மண்,சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட
ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும்நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடமகா இந்த ஆய்வுகூடம் அமைகின்றது.

இத்திட்டத்திற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 3.5மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில்20 ஏக்கர் நிலப்பரப்பில் இப் புதிய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.இதனூடாக கிழக்குமாகாணத்தில் விவசாய நிலங்களினுடைய மண்பரிசோதனை, மற்றும் ஏனைய மண், கல் தரப்பரிசோதனை, கொங்கரீட்மற்றும் சீமெந்து தரப்பரிசோதனைகள் விசேடமாக விவசாயநிலங்களினது மண்ணின் தரத்தினை பரிசோதனை செய்து அந்நிலத்துக்குப்பொருத்தமாக பயிர்வகையினை செய்கை செய்வதற்குமான ஆலோசனைவழிகாட்டல்களும் இதனூடாகப் பெற்றுக் கொள்ளமுடியும்.

இதுஇப்பிராந்திய விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என
கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிஆணையாளர் கே. ஜெகநாத் தெரிவித்தார். இக்கட்டிடமானது இலங்கையில் அமைந்துள்ள தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடங்களில் மொனராகல, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்காக இவ்வாய்வுகூடம் மட்டக்களப்பில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம்ஏ.எச்.எம்.எல். அபேரத்ன, நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் டீ.டீ.பிரபாத்விதாரண, மாவட்ட விவசாயத் திணைக்கள பிரதி விவசாயபணிப்பாளர் வி.பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி வலயம் உதவிவிவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் மட்டக்களப்பு மாவட்ட கமநலஅபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்கள்கலந்து கொண்டதுடன் வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளும்நாட்டப்பட்டமை குறிப்பிடத்தது.








SHARE

Author: verified_user

0 Comments: