17 Jul 2020

தமிழ் மக்களின் இருப்பு தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டும் - த.தே.கூ வேட்பாளர் மா.உதயகுமார்.

SHARE
தமிழ் மக்களின் இருப்பு தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டும் - த.தே.கூ வேட்பாளர் மா.உதயகுமார்.
தமிழ் மக்களின் இருப்பு தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டியது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பொறுப்பு வாய்ந்த கடமையாகும் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமை;பபின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். கொக்கட்டிச்சோலையில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்து எமது மக்களின் இருப்பினை பாதுகாத்து வருகின்ற ஒரேயொரு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் பல தமிழ் கட்சிகள்; போட்டியிட்டாலும் த.தே.கூ தவிர்ந்த ஏனை கட்சிகள் அனைத்துமே பேரினவாத கட்சிகளின் பங்காளி அல்லது ஆதரவுக் கட்சிகளாகவேதான் உள்ளதனைக் காணலாம் இதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போதுள்ள அரச கட்சியானது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை மேலும் அடக்கி ஒடுக்க நினைக்கின்றது இதன் ஒரு செயற்பாடுதான் அண்மையில் கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் ஆய்வுக்குப் பொறுப்பான ஜனாதிபதி ஆணைக்குழு. இவ்வாணைக் குழுவில் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை பெரும்பாண்மை இனத்தினை பிரதிபலிக்கின்ற பௌத்த மதம் சார்ந்த இராணுவ மயமாக்கப்பட்ட ஒரு ஆணைக்குழுவாகவேதான் இது காணப்படுகின்றது.

கிழக்குவாழ் தமிழ் மக்களின் புராதன பாரம்பரிய கலாசார மற்றும் மத அடையாளங்களை இல்லாமல் செய்து பெரும்பாண்மை இன மக்களது பௌத்த மத அடையாளங்களை நிறுவுதற்கான ஒரு ஏற்பாடாக இந்த ஆணைக்குழுவின் செயற்பாடானது அமையுமோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில்  தோன்றியிருந்ததனை நிருபிப்பவையாக அண்மையில் குசனான மலை முருகன் கோவில், வேத்துச்சேனை மற்றும் கல்வெட்டிய மலை, ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகள் ஊடாக காணக்கூடியதாக உள்ளது. மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட நல்லிணக்க நீதிப் பொறிமுறையில் இருந்து இலங்கை தன்னிச்சையாக விலகியமை மற்றும் தமிழ் இளைஞர்களை (மிருசுவில்) படுகொலை செய்ததற்காக நீதி மன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்தமை போண்ற விடயங்களானது இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுவதனைக் காட்டுவதாக உள்ளது.

எனவே இலங்கை அரசானது பெரும்பாண்மை இன மக்களுக்கும் பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை அளித்து ஏனைய இன மக்களினதும் அவர்களின் மதங்களையும் அடக்கி ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரிய எதிர்ப்பு காரணமாக தனது இத்திட்டங்களை பூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமல் உள்ளதனால் த.தே.கூட்டமைப்பினை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என பல சூழ்ச்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டாலும் அவை பலனழிக்கவில்லை என்றே கூறலாம் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் த.தே.கூட்டமைப்பின் ஆசனங்களை குறைக்கவேண்டும் என கூட்டமைப்பிற்கு எதிராக பல கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் இலங்கை அரசு களமிறக்கினாலும் அவையும் பயனழிக்கவில்லை.

என்னதான் பிராயத்தனங்களைச் செய்தாலும் தமிழ் மக்களிடம் இருந்து த.தே.கூட்டமைப்பினை யாராலும் பிரிக்கவே முடியாது இதுதான் உண்மை. 
ஆகையால் நடைபெற இருக்கின்ற தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் மேலும் பலப்படுத்துவார்கள் இதனூடாக எமது உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்தும் த.தே.கூட்டமைப்பானது போராடும் என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.                







SHARE

Author: verified_user

0 Comments: